நற்றிணை தெளிவுரை
19
த லைமகண்
இதன் பயன், தோழி தலைவிபால் பேரன்பினளாதலின், அவர்கள் கூட்டத்திற்குத் தானும் துணையாக அமைந்து உதவுவாள் என்பதாம்.
மேற்கோள்: 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் தொல் காப்பியச் சூத்திரத்துச், 'சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும்' என்னும் பகுதிக்கண், 'வகை' என்றதனானே இதனின் வேறுபட வருவனவும் கொள்க' என்று கூறி, இச் செய்யுளைக் காட்டினர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். 102 சூ.உரை.)
205. மாமைக்கவின் மறையுமே!
பாடியவர்: இளநாகனார் . திணை :... ...
துறை : தலை மகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.
[ (து.வி.) இச் செய்யுள் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாவும், தோழி தலைமகன் கேட்கச் சொல்லிய தாவும் கொள்ளப்படும். தலைமகனது கடமையுணர்வும் காதற்பாசமும் சமநிலையிலே தமக்குள் போராடும் இனிய சுவையை இதன்கண் கண்டு உணரலாம். கடமை தலைவி யைப் பிரிந்து வினைமேற் செல்லலே தக்கது என்று அவனுக் குக் கூறுகிறது; காதற் பாசம், பிரிந்து செல்லின் தலைவியின் கவினழியுமே என்று நினைத்து ஏங்குகிறது. இல்வாழ்வின் சுவையான கட்டம் இது.]
அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்து ஆளி நன்மான் வேட்டெழுபு கோள்உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்துவெண் கோட்டு வயக்களி றீர்க்கும் துன்னருங் கானம் என்னாய் நீயே! குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய ஆள்வினைக் ககறி யாயின் நின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய
5
10
ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!