இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அக் குழந்தை இவ்விதம் பாடியதினால் அதற்குப் பால் கொடுத்தவர் கடவுளே என்பதைத் தகப்பனார் தெரிந்துகொண்டார். அப்போது அவர் மிகுந்த சந்தோஷத்தால் குழந்தை போல் குதித்தார்; கை கொட்டிச் சிரித்தார்; அக் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்; அங்கு வருபவர்களுக்கெல்லாம். இந்த அதிசயத்தைச் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். அக் குழந்தையைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள்.
பிறகு, தகப்பனார் அக் குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு கோயி-
11