இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீங்கள் பல்லக்கினை எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா? படத்தைப் பாருங்கள். முன்காலத்தில் மிகவும் பணக்காரர்கள் இதில்தான் ஏறிச் செல்லுவார்கள்.
ஞானசம்பந்தர் இவ்விதம் பல ஊர்களுக்குப் பல்லக்கில் ஏறிச் சென்று கடவுளைப் பாடிக் கும்பிட்டு வந்தார். அவருடன் பல பெரியோர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள்.
15