இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு நாள் ஞானசம்பந்தர் கடவுளைக் கும்பிடுவதற்காக ஓர் ஊருக்குச் சென்றுகொண்டு இருந்தார். அப்போது வெயில் அதிகமாக இருந்தது. அதனால் கடவுள் அவருக்கு முத்தினால் செய்த பந்தல் ஒன்று கொடுத்தார். நான்கு பேர் அதைக் குடைபோல் தூக்கிச் சென்றார்கள். ஞானசம்பந்தர் அப்பந்தலின் கீழே பல்லக்கில் சென்றார்.
17