இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
ஞானசம்பந்தர் இவ்விதம் பல ஊர்களுக்கும் சென்று கடைசியில் தங்கள் சொந்த ஊராகிய சீர்காழிக்கு வந்தார். ஞானசம்பந்தர் வருவதைக் கேட்டு அவ்வூரார் எல்லாரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அவர் தாயாரும் தகப்பனாரும் அவரைக் காண ஆசையோடு ஓடி வந்தார்கள்.
சில நாட்கள் சென்றன. ஞானசம்பந்தருக்கு வயது பதினாறு ஆயிற்று. தகப்பனார் அவருக்குத் திருமணம் செய்ய எண்ணினார். சீர்காழிக்குச் சிறிது தூரத்திலே நல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அவ்வூரிலே ஓர் அழகான பெண் இருந்தாள். அப்பெண்ணுக்குக் கடவுள் பக்தியும் அதிகம். அப் பெண்ணை, ஞானசம்பந்தருக்குத் திரு-
28