இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மணம் செய்துவைக்க அவர் தகப்பனார் விரும்பினார். அப்பெண்ணின் தகப்பனாரும் அவருக்குப் பெண் கொடுக்க மிக்க ஆசையோடு முன் வந்தார்.
திருமணம் நல்லூரில் நடப்பதாக ஏற்பாடு ஆயிற்று. திருமணத்திற்கு நல்ல நாளும் குதிர்ந்தது. பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் மணவோலை எழுதி ஊர் முழுவதும் தெரிவித்து விட்டார்கள்.
ஞானசம்பந்தருக்குத் திருமணம் என்றால் அதைச் சொல்லவும் வேண்டுமா? ஆண்களும், பெண்களும், சிறியோரும், பெரியோரும் பல ஊர்களிலும் இருந்து முன்ன தாகவே கூட்டம் கூட்ட மாக வந்துவிட்டார்கள்.
அப்போது நல்லூரின் அழகினை ஒருவராலும் வருணிக்க முடியாது. எங்-
29