இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மகிழ்ச்சியோடு கடவுளை வணங்கி ஞானசம்பந்தரை வாழ்த்தினார்கள். திருமணப் பெண்ணின் தாய் தந்தையரும் அவ்விதமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பிறகு, ஞானசம்பந்தர் திருமணப் பெண்ணைக் கையில் பிடித்துக்கொண்டு கடவுளை வணங்குவதற்குக் கோவிலுக்குச் சென்றார். அப்போது, அங்கே வந்திருந்த அன்பர்கள் எல்லோரும் அவரோடு கோயிலுக்குச் சென்றார்கள்.