இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறிப்பு
இச் சிறு புத்தகத்திலே ‘நல்ல குழந்தை’ எனக் குறிக்கப்படுபவர் சைவசமயாசாரியருள் ஒருவராய திருஞான சம்பந்த மூர்த்திகளே யாவார்.
பழைய பெரியோர்களது சரிதங்களை மிகச் சிறு குழந்தைகளும் வாசித்துணரும் தன்மையில் மேல் நாட்டார் பெரிதும் எழுதி வெளியிடுகின்றனர். அம் முறையைத் தழுவி இஃது எழுதப் பட்டது. மிகவும் எளிய சொற்களாலே கடின சந்திகள் சிறிதும் இன்றி இஃது எழுதப்பட்டிருத்தலின் இளஞ் சிறுவர்கள் இதனை இன்புடன் வாசித்தல் கூடும்.
இம்முறையிலே பல புத்தகங்கள் எழுதி வெளியிட எண்ணியிருத்தலின் இதனைப் பெரி யோர் பலரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.
—ஆசிரியர்.