இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடி சொல்லிக் கொள்வதை உங்களில் பலர் கேட்டிருக்கலாம். ஆனால், அது இன்னது என்பது அநேகருக்குத் தெரியாது. ‘மோட்சம் என்றால் எப்போதும் இன்பமாக இருக்கும் இடம்,’ என்று பெரியோர்கள் சொல்லுகின்றார்கள். அங்கே செல்லுகின்றவர்களுக்கு வருத்தம் சிறிதும் இராது. அங்கே சென்றவர்கள் எப்போதும் இன்பமாக இருப்பார்களாம். ஆனால், அதை எல்லோரும் அடையமுடியாது. மிகவும் நல்லவர்களே அந்த இடத்துக்குச் சென்று இன்பமாக இருப்பார்கள்.
ஞானசம்பந்தர் மிகவும் நல்லபிள்ளை அல்லவா? அவரோடு அங்கே இருந்தவர்களும் மிகவும் நல்லவர்கள் அல்லவா? ஆதலால், கடவுள் ஞானசம்பந்தருக்கும், அவரோடு அங்கே வந்திருந்த
37