44
நான்மணிகள்
கடுஞ்சொல் அன்புடையர் வாயினிற் தோன்றாது: வஞ்சனைச் சொல் கற்றறிந்தார் வாயினிற் தோன்றாது; தீய சொற்கள் சான்றோர் வாயினிற் தோன்றாது; கீழ் மக்கள் வாயினில் யாவும் தோன்றி விடும். (96)
அழகிய மகளிர்முன் அழகில்லான் சிறப்படையான்; கற்றார் அவையில் கல்வியற்றார் சிறப்படையார்: கல்லாதார் கூட்டத்தில் கற்றவர்கள் சிறப்படையார்; அறிவில்லார் இடைப்பட்டால் அறிஞரும் சிறப்படையார். (97)
மாசுபட்டாலும் வைரம் ஒளி குன்றாது; கழுவி எடுத்தாலும் இரும்பு ஒளி வீசாது: தண்டித்து வைத்தாலும் கீழ்மக்கள் திருந்தார்கள்; நல்லுரை கூறினும் கீழ்மக்கள் கேளார்கள். (98)
சான்றோரைவிட்டு நீங்காது வாழ்தல் அறிவுடைமையைக் காட்டும்; இரக்கமில்லாருடன் சேர்ந்து வாழ்தல் தீமையடைவதைக் காட்டும்: நண்பர்களது சொல் கடுமையாயிருப்பினும் நல்வழியைக் காட்டும்; பண்புடைய மனைவி இல்லாத வீடு பாழ்படுவதைக் காட்டும். (99)
குளம் சிறிதானால் நீர் கொள்ளாது வழியும்; வருமானம் சிறிதானால் மனைவி மிகுந்து பேசுவாள்; தவச்செயல் சிறிதானால் பயனும் குறைந்துவிடும்; வலிமை சிறிதானால் பகைவரும் பெருகுவர். (100)