நான்மணிக்கடிகை
45
நான்மணிக்கடிகை 45
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார் சாயினுந் தோன்றா கரப்புச்சொல் - தீய (வாய்ச் பரப்புச்சொல் சான்றோர் வாய்த்தோன்றா கரப்புச்
சொல், கிழ்கள் வாய்த் தோன்றி விடும்.
(96)
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன் கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.
(97)
மாசு படினும் மனிதன் சீர் குன்றாதாம் பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும் பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும்.
(98)
எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரிற் றீராமை புண்ணொக்கும் போற்றா ருடனுறைவு - பண்ணிய யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.
(99)
ஏரி சிறிதாயின் நீருரும் இல்லத்து வாரி சிறிதாயிற் பெண்ணுரும் - மேலைத் தவஞ் சிறிதாயின் வினையூரும் ஊரும்
உரன் சிறிதாயின் பகை.
(100)