இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இவைகளைக் கேட்டதும் ஆசிரி யருக்கு இன்னது செய்வதென்று தோன்றாமல் இருந்தது. பிறகு அவர், நாராயணன் சொல்லுவதில் உண்மை இருக் கலாம் என்றும், ஆனாலும் இன்னும் நன்றாக ஆராய்வதே நலம் என்றும் தீர்மானித்து, நாராயணனை நோக்கி,"எது எப்படியிருந்தாலும் நீ ஒரு மாம் பழத்தை வீழ்த்தியதாக ஒத்துக் கொள்கின்றாய் அல்லவா?" என்றார்.
அதற்கு அவன்,'ஆம்;அது பிழையே', என்றான்.
பிறகுஆசிரியர்மாணிக்கத்தையும், அவனோடு சேர்ந்த மற்ற சிறுவர்களையும் நோக்கி "நாராயணன் உங்களுக்குக் கொடுத்ததாவே யிருந்தாலும் என்னிடம் தெரிவிக்காமல் அவைகளை நீங்கள் தின்றி ருக்கக் கூடாது அல்லவா,” என்றார்.
அப்போது மாணிக்கமும், அவனைச் சேர்ந்தவர்களும் ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
பிறகு அந்த ஆசிரியர் நாரயண னையும்,மாணிக்கத்தையும், கந்தன்