இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"அப்படியா - மணியடிப் பதற்கு முன்பா?"
"ஆம்." "அப்போது அவனையன்றி இன்னும் யார் யார் அங்கே இருந்தனர்?" "பல பிள்ளைகள் இருந்தார்கள். அப்போது நான் படித்துக் கொண்டு இருந்ததால் அவர்கள் இன்னின்னார் என என்னால் இப்போது சொல்ல முடியாது.” "நல்லது; நீ உன் இடத்திற்குப் போ" என்று அவர் அவனை அனுப்பி விட்டு அவ்வறையை மற்றும் ஒரு முறை நன்றாகச் சோதித்துப் பார்த்தார். கைக் கடிகாரம் எங்கும் அகப்படவேயில்லை. சி றி து நேரத்திற்குள் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து பிள்ளைகட்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கினர். அவர் பிறகு கடிகாரத்தைக் குறித்தோ, நாராயணனிடம் அகப் பட்ட பேனாவைக் 46