பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



“வாடா நிலையத்துக்கு” என்று இழுத்துச் செல்வது பழக்கம்; அது காவல் நிலையம்; இந்தக் கறுத்தவனும் இதைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறான். “சின்னப் பையன்தான்; என்றாலும், கள்ள வோட்டுப் போடும் வயது; வா” என்று இழுத்துச் செல்கிறான். அவள் தாய் அலறுகிறாள்! “என்னை அழைத்துப் போகக் கூடாதா! என்று கத்துகிறாள்.

அதனை முன்னால் சொல்லி இருக்கலாமே; அவளுக்கு அந்த யோசனை வரவே இல்லை; பின்புத்தி, இழுத்துச் செல்பவன் காத்து நிற்கிறான்; அதனால் தம்பி! தருமம் செய்; இஃது உன் வாழ்வின் கருமம்.


3. காயமே இது பொய்யடா
(யாக்கை நிலையாமை)

சாவுக்குப் பேதம் இல்லை; இளையவன், அரசன், ஆண்டி என்று பிரித்துப் பார்ப்பது இல்லை; கியூவில் சின்னவர் பெரியவர் எல்லாரும் நிற்கின்றனர்; குடை பிடித்துக் குவலயம் ஆண்ட மாநில மன்னர் எல்லாரும் அடை மழைக் காலத்தில் அடையும் இடம் சுடுகாடு தான்; அங்கேயும் அவர்கள் சுகவாசிதான்; “ஏ.சி. இல்லை” என்று சொல்வதே இல்லை; அவர்களே குளிர்ந்துவிட்டனர். பி.சி.யில் வாழ்ந்தவர் பலர்.

பத்திரிகைச் செய்தி தேதி முத்திரை பெற்று வெளிவருகிறது. “மணமகன் பிணமகனானான்; நேற்று