பக்கம்:நூறாசிரியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நூறாசிரியம்


ஒழுகல் - ஒத்துப் பழகுதல் ஒரு படித்தாய் நிற்றல். உலகில் ஒரே சீராக அமைந்த ஒரு பொருளை யாண்டுங் காண்டல் அரிது. ஒன்று போலவே வேறொன்றை ஒரே இனமும், தன்மையும், எடையும் வாய்ந்த இன்னொன்றைம் பார்த்தல் இயலாதாம். நெல், கம்பு முதலிய தவச மணிகளும், குன்றி, பவழம் முதலிய பரு மணிகளும் பெரும்பாலும் ஒன்றியிருப்பினும் ஒரோவொரு கால் வேறுபடுவனவே. எனவே ஒரே சீராகவும் ஒரு படித்தாகவும் இருப்பன நீர்ப்பொருள் ஒழுகும் ஒழுக்குத் துளிகளே! ஒரே நீர்மப் பொருளின் பல துளிகளும் ஒரே சீருடையன. மேலும் ஒரு தொளையினின்று ஒரேயளவாக நீர் துளிர்த்துக் கசிந்து வெளிவருதலைத் துளிகள் என்றும், அது வரும் தன்மையை ஒழுக்கு என்றும் கூறினர் தமிழர். அதனின்று பிறந்ததே ஒழுக்கம் என்ற மாந்த நடைமுறைச் சீர்மை குறித்த சொல்லும் ஒழுக்கம் உடையவன் என்ற கூற்றுக்கு ஒரே படித்தான சீர்மை- நடைமுறை வாய்ந்தவன் என்பதே பொருள். பெரும்பாலும் உயர்ந்த தன்மைக்கே சீர்மை உரித்தாகலின் ஒழுக்கம் என்பதே உயர்ந்த நெறியைக் குறித்தது. நீர் ஒழுக்கல் உடைய தன்மையின், ஒழுக்கத்திற்கு நீர்மை என்றும் சொல் உண்டாயிற்று. அதன் பின்னரே நீரின் பிற (தூய்மை, தண்மை, பரந்தமை, கொண்மை முதலிய) துண்தன்மைகளையும் அச்சொல் அளாவி நின்றது. அலமர-சுழல அஞ்சகலங்க-வருத்ததுன்பமுற. சிவந்த கண்களையுடைய அக்குழந்தை தன் விழிகளை நான்கு புறமும் சுழற்றி மருட்சியுற அழுது தன் தாயைத் தேடுதலை உணர்த்திற்று. செங்கண் அலமரத் தேடி என்றும் கொண்டு கூட்டிப் பொருள் கண்டு மகிழ்க

ஒரு தாய்த் தேடி - ஒரு தனித் தாயைத் தேடி குழவிக்குத் தன் தாயைவிட வேறொரு புகலிடம் இல்லையாகவின் ஒரு தாய் எனலாயிற்று.

'குழவி அலைப்பினும் அன்னே என்றோடும்'(நான்மணிக்கடிகை35) என்றும்,

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன். அருள் நினைந்தே அழுங்குழவியதுவேபோன் றிருந்தேனே’ (பெருமாள் திருமொழி ) என்றும் குழவியின் தாய்மைப் பிடிப்பு காட்டப்பட்டுள்ளது.

குழவிக்குத் தாய்போல், தலைவிக்குத் தலைவன் என்பதைத் தலைவி தோழிக்கு உணர்த்தினாள்

உவந்து உள்ளம் விரும்பம்.கிழ்ந்து ஒரு தாய் தேடி உவந்து - என ஒரு தனித்தாயைத் தேடலும், அவளைத் தொலைவிற் கண்ட அளவிலேயே உவத்தலும் கூறலாயிற்று.

தேடிக் கண்டு உவந்து என வராது. தேடி உவந்து என வந்தது உவத்தல்

கண்ட நொடியினானே நிகழ்ந்த விரைவு பற்றி

அதுபோலவே உவந்து புன்றலை பெரும, புதைக்கும் என்பதிலும் உவந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/50&oldid=1221646" இலிருந்து மீள்விக்கப்பட்டது