இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சின்னச் செடிநட்டாள்;
சீராட்டி நாள்தோறும்
கன்னத்தில் சேர்த்துக்
கருமணிபோல் காத்துவந்தாள்.
“ஆவி தளிர்க்க
அரும்பும் மலர்ச்செடியே ! பாவியெனக் குன்னையன்றிப் பாரில் துணையில்லை. என்னுடம்பும் என்னுயிரும் என்றன் உயிர்த்துடிப்பும் உன்னையன்றி வேறில்லை; உண்மையாய்ச் சொல்லுகிறேன்.
உன்மூச் சறுந்துவிட்டால்
அக்கணமே இக்கோதை தன்மூச் சறுந்துவிடும் சற்றுமிதில் ஐயமில்லை"
என்று புலம்பினாள்;
எண்ணா தனவெண்ணி
நின்று நடுங்கினாள்;
நெற்றிக்கு மேல்திரண்ட
மேகக் கருங்கூந்தல்
மேலே பரப்பிவைத்துப்
பூகம்பப் பேரழுகை
பொங்கிவரக் கண்ணிர்த்
______________________________ 30 பனித்துளிகள் ______________________________