இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடைகாத்த கோதை
அகன்ற சிறிய
இடைவேளை நேரத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையும் பொல்லாத் தனயனும் மாடிக்குள்
வந்து புகுந்தார்;
வதங்குமவள் ஆவியினை கட்டுப் பகலிரவாய் நாள்தோறும் காத்துவந்த தொட்டியை நெஞ்சத் துடிப்பையவர் கொண்டுசென்றார்.
எட்டித் தொலைவில்
எவரு மறியாமல்
தொட்டியைப் போட்டுடைத்தார்;
கண்ணன் முடித்தலையும் வட்டுக்கைக் குட்டையும் பார்த்தவரை அச்சுறுத்த நட்டமரம் ஆனார்; நடுக்கத்தால் வேலப்பர்
அந்தக் கணமே
அதிர்ச்சியினால் செத்துவிட்டார்.
எந்தவிதம் தப்பிப்
பிழைப்ப தெனகடுங்கி எங்கோ மறைந்தான் கொலைகாரன்; கோதையோ
______________________________ 32 பனித்துளிகள் ______________________________