உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

குயிற் பாட்டு

வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்;
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர்”
வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்
             காதல், காதல் காதல்;
             காதல் போயிற் காதல் போயிற்
             சாதல், சாதல், சாதல்.
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: —
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்;
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்(டு) ஆங்ஙனே 60
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
‘ஆவி யுருகுதடி, ஆகாகா!’ என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ(து) ஆற்றுகிலேன்;
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்” 70
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்(கு)என் வாளுக்குத்