உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்புரை

43

(71 - 75) காதலர்க்குப் பிரிவு என்பது ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கும். கொடு - 'கொண்டு' என்பதன் தொகுத்தல் விகாரம். தேறா - தாங்க முடியாது.

4. காதல் வேதனை

(1- 5) கனவு நனவு என்று அறியேன் - கனவோ நனவோ என்பதைத் தெரியேன், கனி - பித்து, காமனார் - மன்மதன், கொம்புக் குயிலி - மரக்கொப்பில் இருந்த குயில்.

(6-10) போந்து - வந்து : 'புகுந்து' என்பதன் மரூஉ. தறி - நெசவுக் கருவி - கட்டுத்தறி.

(11-15) நீளச்சிலை - பெரிய வில், தீம்பாட்டு-இனிய பாடல், சாயை - நிழல். இந்திர மாராலம் - மாய வித்தை.

(18 - 20) உட்கருக்களாகிய மனம், புத்தி,சித்தம், அகங்காரம் - இவை அந்தக் கரணங்கள் எனப்படும்; சூத்திரம் - சூத்திரக் கயிறு - பொம்மையை ஆட்டுபவன் கையிற் பிடித்த கயிறு; கடுகவும் - வேகமாக, நீலி - லெநிறமுடைய குயில்.

(21- 27) செஞ்ஞயிரும் செம்மை + ஞாயிறு )- பண்புத்தொகை சூரியன்; ஈண்டும் - வந்து கூடும், கரை கடந்த - அளவுக்கு மிஞ்சிய, கோணம் - மூலை

5. குயிலும் குரங்கும்

(1-6) சுற்று முற்றும் - பக்கமெல்லாம், தொல் விதி - பழமையான விதி.

(6-10) பித்தர்-காமப்பித்துப் பிடித்தவர், கேண் மின் கேளுங்கள்: ஏவற்பன்மை வினைமுற்று பதைக்கும் - நடுங்கும்.

(11 - 15) விம்மி-பொருமி, இரங்கும் - வருந்தும்.

(16-20) சிந்த - கொன்றுவிட, ஒளிந்து - மறைந்து.

(21-25) வானரரே - குரங்காரே;வால் +நரர் = வானரர்; ஈடு அறியா - ஒப்பில்லாத, ஏந்தலே - தலைவரே, ஏந்தல் - ஆண்பால் சிறப்புப் பெயர்; மையல் - காதல் மயக்கம்.

(26-80) வகுத்தல் அமைத்தல், வாயில்-வழி, விண்டு

உரைக்கும்- வாய் திறந்து பேசும், குரங்கு கூளிக்குத்தியிருக்கும் இயல்புடையது.