3
கவிஞர் சுரதா அவர்கள், "வஞ்சகர்கள் உண்மையை மறைக்கிறார்கள். நீங்கள் இப்படி இருக்கக் கூடாது; எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும்” என மிகுந்த ஆர்வத்தோடு என்னிடம் கூறினர். மற்ற நண்பர்களும் அடிக்கடி வற்புறுத்தலானார்கள். மேலும், என் மகன் செல்வன் பழநியப்பனும் தினமும் என்னைத் தூண்டிக் கொண்டிருந்தான். அதன் விளைவே இந்நூல்!
பாவேந்தருடன் நான் உடனிருந்தபோது நிகழ்ந்தவை, கேட்டவை, அனைத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்து இந்த ’விருந்’தை வழங்குகின்றேன்.
பாவேந்தர் 89-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியையும், சொற்பொழிவுச் சுருக்கத்தையும் குறிப்பெடுத்து உதவிய 'தமிழரசு’ துணை ஆசிரியர் புலவர் தமிழ்ப்பித்தன் அவர்களுக்கும், சிறப்புரை வழங்கிய புன்னகை தவழும் கவிஞர் கோவேந்தன் அவர்களுக்கும் இதை வெளியிடும் மணிவாசகர் நூலகத்தினருக்கும் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
சென்னை-1
6.3-8.0
முல்லை பிஎல். முத்தையா