25
புதியதோர் உலகு செய்வோம்
ஒரு பெண்ணுக்கு அங்கீகரிக்கப்படாத தாய்த் தன்மை உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கொடுமையானதாக சமூகப் புறக்கணிப்பை விளைவிக்கிறது. எனவே அவள் மனமொப்பி அந்தக் குற்றம் புரிய மாட்டாள்.
ஆனால் அவள் வஞ்சிக்கப்படுகிறாள்; உடலியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் தண்டனைகள் ஏற்கிறாள். எனவே விழிப்பும் மலர்ச்சியும் பண்பும் உடைய எந்தப் பெண்ணும் பொறுப்பற்ற அவதூறுகளை வீசமாட்டாள்.
இப்போது, இந்தக் கூறுகளை வகைப்படுத்தித் தீர்வுகளைச் சிந்திப்போம்.
பெண், தன் காலால் நிற்கும் உரிமையைப் பெறுவதுடன், தான் எந்த நிலையிலும் பத்திரமற்றவள் என்ற உணர்வைக் கெல்லி எறிந்துவிட்டுத் தன்னம்பிக்கையைக் கொள்ள வேண்டும்.
இந்நாள் படித்துப் பொருளாதார சுதந்தரம் பெற்ற பல லட்சக்கணக்கான பெண்கள் இதை நிச்சயமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
இன்றைய உழைக்கும் மகளிரிடையும் குடும்ப வேற்றுமைகள் - சுமுகமற்ற உறவுகள் பிளவுகளைப் போக்க முனைய வேண்டும்.
வசதிகளும் சலுகைகளும் வாய்ப்புகளும் பெற்ற இடைநிலைக் குடும்ப மகளிர் ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் அலுவலக ஊழியர்களாகவும் பல நிலைகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களும் மாமியார் - மருமகள், அண்ணி - நாத்தி பிளவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
மாமியார்களாக இருக்கும் மூத்த தலைமுறையினர் இளைய தலைமுறையினர் அலுவலகப் பொறுப்புக்களை