நூல் முகம் எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி ! மனத்தில் சலனம் இல்லாமல் மிதியில் இருள்ே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின்மவுன நில்ைவக் திட்ஜ் செயல்வேண்டும், கனக்கும் செல்வம் துறுவய(து), இவையுங் தரகீ கடவாயே! - பாரதியார் இளமை முதல் இன்றுவரை அடிக்கடி படித்து, சிந்தித்து, ஆழங்கால் ப்ட்டு வரும் பாரதியாரின் படைப்பு களை மீட்டும் ஒருமுறை படிக்கவும் சிந்திக்கவும் வாய்ப் பளித்தது புதுச்சேரி பல்கலைக் கழகம், அந்த வாய்ப்பே திரு. ஆனந்தரங்க, கிருட்டிணசாமி பிள்ளை - திருமதி அம்சம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவாக வடி வெடுத்தது. அந்தச் சொற்பொழிவு வடிவமே இன்று அச்சு வடிவம் பெறுகின்றது. சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்பும் வசதியும் அளித்த பல்கலைக் கழகத்திற்குகுறிப்பாக அதன் துணைவேந்தர் (டாக்டர் கி. வேங்கட சுப்பிரமணியம் அவர்கட்கு) என் மனமுவந்த நன்றியை யும் வணக்கத்தையும் புலப்படுத்திக் கொள்வதுடன் இப் பொழிவை என் பொறுப்பில் அச்சிட்டுக் கொள்ள இசை வளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகின்றேன். இளமைத்துடனும் தமிழ் உணர்வுடனும் நல்ல நூல் களை வெளியிட்டு வருபவர் தேன்.மழைப் பதிப்பக உரிமையாளர் திரு. வெள்ளையப்பன் அவர்கள். இந்தச் சிறு நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்ட்மைக்கும், புதுவைப் பல்கலைக் கழகம் விரும்பியபடி ஐம்பது படிகள் அன்பளிப்பாகத் தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டமைக்கும் என் சார்பாகவும் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சார்பாகவும் என்_இதயம் கலந்த நன்றி யைப் புலப்படுத்திக் கொள்ளுகின்ற்ேன். 1. விநாயகர் நான்மணி மாலை - 7
பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/8
Appearance