உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 11 வெறுத்ததாகவே இருக்கிறது! ஆகையால், நீ என்னிடத்தில், கொண்டுள்ள துன்மார்க்க எண்ணத்தை மாத்திரம் தயைசெய்து விலக்கிவிட வேண்டும். நீ எப்பாடு பட்டாலும் அது பலியாது. அம்மாளு:- (வேடிக்கையாக நகைத்து) ஒகோ அப்படியா சங்கதி! இது இந்த உலகத்திலேயே இல்லாத அபூர்வமான விஷயமாக இருக்கிறதே அன்றி வேறல்ல. ஸ் திரீகள்தான் பதிவிரதைகளாகவும் ஒரே ஒரு புருஷரிடத்தில் உறுதி உள்ளவர் களாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். புருஷர்கள் இப்படிப் பதிவிரதா ஸ்திரீகள்போல இவ்வளவு பயபக்தியோடு நடந்து கொண்டதை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. நான் உங்களைக் கலியாணம் செய்து கொள்ளவா ஆசைப்படுகிறேன்? அதுவொன்றும் இல்லை. நீங்கள் ஆசைப்படும் பெண்ணினிடத்தில் நீங்கள் உங்களுடைய பிரியத்தை எல்லாம் வைப்பதற்கும் நான் இடையூறாக இருக்கப் போகிறதில்லை. மனிதருடைய பிரியம் என்பது பணமல்ல சாமானல்ல; கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போகக் கூடிய வஸ்து வல்ல. உங்களுடைய மனசிலுள்ள பிரியத்தில் எனக்குக் கொஞ்சம் கொடுத்தால், அதன் பிறகு உங்களுடைய சம்சாரத்துக்குக் கொடுக்க பிரியம் இல்லாமல் போகுமோ என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆகையால், நீங்கள் எனக்கு மாத்திரமல்ல, இன்னும் ஆயிரம் ஸ்திரீகளுக்கு உங்களுடைய பிரியத்தைப் பங் கிட்டுக் கொடுத்தாலும், அப்போதுகூட உங்களுடைய சம்சாரம் பாதிக்கப்பட மாட்டாள். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதது அல்ல. நீங்கள் உங்களுடைய அழகினாலும் நல்ல குணத்தினாலும் என்னுடைய மனம் முழுதையும் கவர்ந்து விட்டீர்கள். நான் இரவு பகல் உங்களுடைய நினைவாகவே இருந்து உருகுகிறேன். உங்களை நான் கண்டமுதல் எனக்குச் சாப்பாடு வேப் பங்காய் ஆகிவிட்டது. துக்கமே போய்விட்டது. இன்னம் சில தினங்கள் நான் இதே நிலைமையில் இருந்து நரகவேதனை அனுபவிப்பேன்