இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 பெருந்தகை மு. வ
கடைப்பிடித்த செம்மையையும் நன்கு அறிந்த வருவாய்த்துறை
ஒப்பந்தக்காரர் ‘நாயுடு சகோதரர்’ என்பார். அவரே தம் ~ தனிச் செல்வாக்கினல் நகராண்மைக்கழக உயர்நிலைப் பள்ளி யில் வேலைக்கு அமர்த்தினர். முருகைய முதலியார் அமர்ந்து பணியாற்றிய இடத்திலே தாம் இருந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை உன்னி உன்னி உளம் மகிழ்ந்தார் மு. வ. தம் இடத் திலே தகுதி சான்ற தம் மாணவர் அமர்த்தப் பெற்றதறகுப் பேருவகை உற்றார் முருகைய முதலியார். மு. வ. வின் வாழ்வு வேலத்தில் இருந்து திருப்பத்துார்க்கு மீண்டும் மாறியது. வேலம் தந்த பெருவாழ்வு அன்றாே இது ! -