இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன்னொளி வீசித் தன்னெழில் காட்டிப்
புறப்பட்டான் பரிதி! பொங்கலோ பொங்கல்!பசுந்தழைக் காடெல்லாம் விசும்பின் பேரெழில்!
வண்ண மாமலர் கண்ணாற் சிரித்தது!
மதுமயக் கேறிய நாவல் வண்டு
5
மெல்லிசை கூட்டி நல்லியாழ் இசைத்தது!
புள்ளிணை இன்ப வெள்ளத்தில் திளைத்தது!மாக்க ளெல்லாம் நோக்குவே றின்றித்
துணையுடல் வருடி இணைந்திருந் தனவே!அரும்புப்பற் சிறுவர் கரும்பைச் சுவைத்தனர்!
10
கன்னியர் விழியும்,காளையின் தோளும்
ஒன்றோ டொன்று கலந்துற வாடின!
தமிழின் சுவையாம் பொங்கல் அமிழ்தைச்
சுவைத்தனர் யாவரும்! சுவைத்தனர் தமிழை!ஆடினர்! இணைந்தே பாடினர்!
15
வாழ்த்தினர் பொங்கலை! வாழ்கநம் பொங்கலே!
16