2 இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை கருதினர். கற்றவரை உலகத்தில் எந்தத் தேசத்து மக்களும் வரவேற்பர் என்பது அவர் கருத்து. அதனுல்,
- யாதானும் நாடாமால் ஊராமால் என்குெருவன்
சாந்துணையும் கல்லாத வாறு ?? என்று மொழிந்தார். (ஒருவர் பிறந்தது ஒரு நாட்டில் ஆயினும், அவர் பிற நாட்டினருக்குப் பயன்படுமாறு வாழ்க்கை நடத்துவாராளுல், அவரை வாழ்வாருட் சிறந்தவர் என மதித்தல் வேண்டும். அவ்வாறு மதிக்கத் தக்கவர் உலகத்தில் ஒரோவொருகால் ஒவ்வொரு நாட்டில் தோன்றியுள்ளனர். அவர் தம்முள் செர்மானிய குடிமகாராய்ப் பிறந்து, ஆப்பிரிக்கா தேசத்து மக்களுக்கு அரும்பணி ஆற்றிய, ஒருவரது வரலாறு இங்கே சொல்லப்படு கிறது) காந்தியடிகள் கடவுளிடத்து ஒருவர் அன்பு கொண்டுள்ளார் என்ருல், அவர் மக்களிடத்துக் காட்டும் அன்பினுல் அது புலப்படவேண்டும் என்ருர். பிற உயிர்களுக்குத் தொண்டு ஆற்று கின்றவர் யாவர் என்று தேடி ஆாாய்ந்து, அவர் உள்ளத்தை உறைவிடமாகக் கொள்கிருர் கடவுள் என்பது காந்தியடிகளின் நம்பிக்கை. ஏழை எளியவர்கட்கும், சமூகத்தால் அழுத்தப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டு இருக்கிற மக்கட்கும் யாவர் உள்ளத்தாலும் உடலாலும் உயிராலும் உழைக் கிருர்களோ அவரே சிறந்த அன்பினர் என்பது காந்தியடிகளின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு ஏற்ற வழியில் வாழ்க்கையை நடத்திய பெரியவர்