உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார். அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் - புறத்த புகழும் இல' என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பம்: சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவன் திருவள்ளுவர். திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரிகப் புரட்சிக் கொடியை அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும்-இன்பமும், அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல என்று விரப்பண் பாடி - வfறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக் கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300 ஆண்டுகட்கு முன்பே மறுத்து, தமிழர் பண்பாடுகளை நிலை நாட்டிய மதச் சீர்திருத்த ஞானப் புரட்சியாளரான திருவள்ளுவர் பெருமானுக்கு - 1962, மே 3, 4 ஆம் நாட்களில் ஒரு மாபெரும் சோதனை ஏற்பட்டது. தமிழ் மறைச் சிற் பரியான திருவள்ளுவருக்கு உலகில் இத்தகையை ஒரு மத ஆய்வுப் போர்க்களம்; அவள் வாழ்ந்திருந்த காலம் முதல் அன்று வரை வேற்று மதச் சவாலால் உண்டானதில்லை, உருவானதில்லை. அந்த விவரம் கீழே உள்ளது. : சென்னையில் இன்றும் நடமாடும் நண்பர் புலவர் தெய்வ நாயகம் என்பவர், 'திருவள்ளுவர் கிறித்தவரா, ஐந்த வித்தான் யார்? வான் எது? நித்தாள் யார்?, எழு பிறப்பு!, சான்றோர் யார்? என்ற ஆறு ஆய்வு நூல்களை எழுதி திருவள்ளுவர் பெருமானைக் கிறித்துவராக்கிட அரும்பாடுபட்டார். இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர், அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியவர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்து, சென்னை எல்டாம்க சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொப்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து பிடி, எம்.டி.எச், அவர்கள், வள் ப்ராட்டஸ் டண்டு கிறித்துவர். திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ்: சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில்ஃமே மாதம் 3, 4 நாட்களில் 1962-ஆம் ஆண்டில் நடைபெற்றது. திராவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப் பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர் இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார். - இந்த மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத் தலைவராக இந்த