இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காடுகளும் மாறி மாறி இருந்தன. சாலைகளில் மாட்டு வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. மணிவண்ணன் ஏழைப்பையன்தான். ஆகவே கால் நடையாகவே பயணம் புறப்பட்டான்.
வழியில் தென்படுவோரை யெல்லாம் விசாரித்துக் கொண்டு அவன் வண்டிப் பாதைகள் வழியாகவும், ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் நடந்து சென்றுகொண்டிருந்தான்.