மின்னொளி
மின்னொளி:- (வருந்தி) ஐயோ! அதைச் சொல்லத் தான் நினைத்தேன். என் மனம் வேகிறது. அவனை மனப்பதைவிட கல்லைக் கட்டிக் கொண்டு இந்த ஏரியில் விழுவதுமேல்.
செல்ல :- தற்கொலை பாபமாயிற்றே.
மின்னொளி:- அந்தக் குடிகாரனை மனப்பதைவிடவா?
செல்ல :- வேண்டாம் மின்னொளி அப்பாவின் மனதை மாற்ற முயலு.
மின்னொளி:- நாய் வாலையாவது நிமிர்த்தலாம். அது முடியாது. அப்பாவின் பிடிவாதம் அவ்வளவு கோணலாயிற்றே!
செல்ல :- வேறு வழியில்லையா?
மின்னொளி :- எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நீங்கள்தான் சொல்லவேண்டும்.
செல்ல :- (வியந்து) நானா?
மின்னொளி, ஆம். என் வாழ்வும் தாழ்வும், உங்கள் கையில் தானிருக்கின்றன.
செல்ல :- நான் ஏழை; தாங்கமாட்டேன் மின்னொளி
மின்னொளி: உங்கள் அன்பிலும் பலத்திலும், எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
(தொலைவில் ஓர் எருமைக்கன்றோடு, நான்கு பேர் தோன்றுகின்றனர்)
செல்ல :- (அச்சத்தோடு) அதோ யாரோ நம்மை நோக்கி... பார்த்தாயா?........
மின்னொளி:- பயப்படாதீர்கள். தமது பண்ணையாட் கள். நாளை மறுநாள்.ஓங்காளிக்குப் பலிபூசைக் காக எருமைக்கடா கொண்டுபோகிறார்கள்.
24