நாடகம்
வயிர - ரொம்ப சரி, மாத்தி வச்சுக்கோ. யாரு வேண்டான்னங்க? சும்மா உடுப்பா, பனங் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
(போகிறான் வயிரமுத்து.)
இருளன் :- (ஆத்திரத்தோடு) அடேய் எங்கே பேசிக்கிட்டே போறே? நில்லுடா!
சடை :-(மெலிந்த குரலில்) அப்பா....
இருளன் :- ஏம்மா?
சடை :- சேத்துலே கல்லைப்போட்டா மொகத்தில்தானே தெரிக்கும் வேணாம்ப்பா...
இருளன் - எங்கண்ணு ஆதியிலேருத்து ஒம்புத் தியைக் கேட்டாவது நடந்துகிட்டேனா? நான் பெரிய மடையன்.
(செல்லத்துரை வருகிறான் வேகமாக.)
செல்ல :- (ஆவலோடு) சடைச்சி !சடைச்சிக்கு என்ன நேர்ந்தது?
சடை - (சோகத்தோடு) வாத்தியாரண்ணா' என் காலு.....
செல்ல :- (கதறி) ஆ நீயேன் இக்கதிக்கு ஆளாக வேண்டும்? எதற்கு வந்தாய் பள்ளிக்கூடத் திற்கு? ஐயோ? இறக்கை ஒடிந்த வானம்பாடி யாகிவிட்டாயே!
இருளன் :- (வருந்தி) வாத்தியாரே! வயிரமுத்து பேச்சைக்கேட்டு நான் மோசம் போயிட்டேன். என்னை மன்னிக்கனும். என் வினையே என் மகளைச் சுட்டது.
செல்ல :- எப்படி ஐயா? சொல்லுங்கள்.
33