தொல்லை. நீங்கி நலமுடன் வாழலாம்
42
அதே போல, கழுத்துப் பகுதிகளிலேயும் வலிஉருவாகும். இதுவும் ஒருவகை கழுத்து வலி நோய்தான்.இந்தநோய் கூட வயது ஆக ஆக ஏற்படும் நோய்களில் ஒன்று தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கழுத்து வலி தோன்றக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அலுவலகங்களிலே வேலை செய்யும் மனிதன், உட்கார்ந்து குனிந்து அடிக்கடி தலையை ஆட்டி ஆட்டி கழுத்துக்கு அதிகமாக வேலை கொடுக்கும் அவசியம் ஏற்படுகின்றது.அதனாலும் கழுத்து வலிநோய் உருவாக வழி இருக்கின்றது.
மோட்டார். பேருந்துகள், லாரிகள், ஸ்கூட்டர்கள். சைக்கிள்களை ஒட்டுகின்றவர்களும் அடிக்கடி கழுத்துப் பகுதிக்கு அதிகமான வேலைகளைக் கொடுக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு வரக்கூடிய நோய் கழுத்து வலி நோய். இவர்களும் கழுத்துப் பகுதி வலிகளால் அடிக்கடி துன்பப்படுவதும் உண்டு.
கழுத்து வலி, எப்படி ஏற்படுகின்றது என்பதைப் பார்த்தோம். ஆனால், எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. *
கழுத்துப் பகுதியில் ஏழு வகையான எலும்புகள் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. இவற்றின் நடுவேதான் மூளைப் பகுதிக்குச் செல்லும் நரம்புகள் உள்ளன. இயற்கையான மனிதப் பிறப்பு நமக்கு எவ்வளவு பாதுகாப்பாக மூளைப் பகுதிக்குப் போகும் நரம்பை அமைத்துள்ளது என்பதைப் பார்த்தீர்களா?
மூளைப் பகுதிக்குப் போகும் நரம்புகள். இந்த ஏழு எலும்புகளுக்கு நடுவே அமைந்துள்ள காரணத்தால், நாம்