உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.

3. "தலைமகள் தன்னகத்தே வதுவைக் கலியானம் (திருமணம்) செய்வான் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட கற்ருய் "ஒழிந்த கலியாணம்' (சிலம்புகழி கோன்டி நிகழ்ச்சி) செய்யினும் கம் அகத்தே வதுவைக் கவியாணம் செய்ய நேருங்கொல்லோ, காளையைப் பயந்தாள் ” - என்னும் இறையனர் களவியல் உரையும் " ஒழிந்த, கலியாணம்” என்று இச்சிலம்பு கழி கோன்பை ஒரு மண கிகழ்ச்சியாகவே குறிக்கின்றது.

3 'மணம் புரிவதற்கு முன் மணமகளது காலில் பெற்ருேர்கள் அணிந்திருந்த சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது “ சிலம்பு கழி கோன்பு" எனப்படும்” - என்று தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களும் விளக்கியுள்ளார்கள். .

எனவே,

சிலம்பு, கன்னிப்பெண்ணிற்கு இ ன் றிய ைம யாத அணிகலன்

சிலம்பணிவது ஒரு மரபு,

அது, கன்னி கழியுமுன் கழற்றப் பெறும்.

அதற்கொரு மனநிகழ்ச்சியே உண்டு.

அது ' சிலம்பு கழி நோன்பு ' எனப்படும்.

இவற்ருல்

சிலம்பு கன்னிப்பருவத்தின் சின்னம்.

திருமணம் பற்றிய மரபுகள் யாவும் பெற்ருேர் இசை வுடன் நிகழ்த்தப்பெறும் திருமண நிகழ்ச்சியில்தான் முறை. யாக அமையும். களவுத் திருமணத்தின்போது இம்முறை: அமையுமாயினும் முறையில் ஒழுங்கு இருக்காது.

36. இறையனுர் களவியல் : 28 உரை, * ஐங்குறுநூறு 399 குறிப்புரை