#3 畿葵
« o: கருமலைப்பழம்நீ
சென்னை.
22-3-33
அன்பு நண்ப, வணக்கம். அழகி கவிதைத் தொகுதி கிடைத்தது. மகிழ்ச்சி. அனுப்பியதற்கு நன்றி. கவிதைகளைப் படித்து ரசித்தேன். இனிமையாய், எளிமையாய், இயல்பான ஓட்டத்துடன் கவிதைகள் அமைந்துள்ளன. சிந்து, அகவன், சாயல் வரி, வெண்பா, விருத்தம், புதுக்கவிதை எனப் பல வடிவங்களிலும் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். அதே போல் பல்வேறு பொருள்கள் குறித்தும் இனிமையாகப் பாடியிருக்கிறீர்கள்.
கலையை, கவிதையை, அன்பை, அழகை இப்படிப் பவப்பலவற்றையும் பெண்ணென உருவகித்து, அருள் புரிய வரும்படி
கவிதை எழுதுவது இயல்பு. துயிலையும் சாவையும் கூடவா என வரவேற்று எழுதுவதும் சகஜம் தான். நீங்கள் கவலையை சுடர்விளக்கு
“o గిబ్స్లో
என்றும், பெண் எனவும் விளித்து, "என்னைத் தழுவிட வா" என அழைத்துப் பாடுவது வித்தியாசமான கற்பனை தான்.
பனியைப் பாஷையாக்கிப் பாடியிருப்பதும் அப்படிப்பட்டது
裂。 கீழ்ப் பற்றும் வித்தியாசமானதாகத் தான் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழாளவில்லை என்றால் - தமிழ் பேசும் தாவினிலே ஏற்றுவாளை என்றும், தமிழ்க்குறளை தீவிட்டுக் கொளுத்து - சங்கப்பா முழுவதையும் சாம்பலாக்கு என்தும் முழக்கமிட்டிருக்கிறீர்கள்.
தமிழ்வு முழங்குவது சரிதான். அதுக்காக தமிழ் இலக்கியச் செல்வங்களை தாச க்கு என்று முழக்கமிடுவது தான் விபரீத ஆசையாக இருக்கிறது.
அழகி குறுங்காவியம் கதையில் புதுமையில்லை. கவிதைகள் நன்றாக, இனியனவாய், உள்ளன.
- ... - சி த
"கழுதைக்கு ஒரு பாமாலை பாடியிருப்பதும் உங்களை ஒரு வித்தியாசமான கவிஞராகக் காட்டுகிறது. -
சங்ககாலக் காதல் காட்சிகளை எளிய நடையில் தந்திருப்பது பாராட்டத் தகுந்த முயற்சி.
உங்கள் தமிழ் காதலும், கவிதை ஆற்றலும் வாழ்க வளர்க!
அன்பு
Glf. H.