டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 35
இவ்வாறு ஒர் ஆண்டை ஆறு பெரும் பொழுது களாகப் பிரித்து வகைப்படுத்திய பெருமை கம் முன்னோர்களுக்குண்டு. இதனால் அவர்களின் காலப் பகுப்பாய்வுத் திறனும் அறிவியல் பாங்கும் புலனா கின்றது. இவ்வாறே சிறுபொழுதைப் பகுத்துள்ளனர். அதன் விளக்கத்தை இனிக் காணலாம்.
சிறுபொழுது
ஒரு நாளை 6 கூறிட்டு வகைப்படுத்தியுள்ளனர். அதுவே சிறுபொழுது என்று அழைக்கப் படுகிறது. 1. மாலை முல்லைத் திணைக்குரியது. இரவுப்
பொழுதின் முற்கூறு. 2. யாமம்-குறிஞ்சித் திணைக்குரியது. இரவுப்
பொழுதின் கடுக்கூறு.
3. வைகறை - மருதத்திற்குரியது. இரவுப்
பொழுதின் பிற்கூறு.
4. விடியல்-மருதத்திற்குரியது. பகற்பொழுதின்
முற்கூறு. 5. ஏற்பாடு-நெய்தல் திணைக்குரியது. பகற்
பொழுதின் பிற்கூறு.
6. கண்பகல்-பாலைக்குரியது. பகற்பொழுதின் கடுக்கூறு. i
இச்செய்திகளால் ஒரு நாளை இருகூறாகவும், ஒவ்வொரு கூறையும் முன், கடு, பின் என மூன்றாக வும் பிரித்து ஆறு சிறுபொழுதுகளை அமைத்