உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கிறுக்கியிருந்த இதழ்க் கங்கினின்றும் வார்த்தைகள் கிளம் பின. இருந்த இடத்திலிருந்து நகர்ந்து, இன்னும் நெருக்கம் அமைத்துக் குந்தினுள் அவள். மெலிந்து வெளுத்துக் கிடந்த கைகளை ஆதரவுடன் அன்பு சேர்த்துத் தடவிக் கொடுத்தாள். துளி கக்கிய சுடுநீர் மணிகளையும் நாசூக்காகத் தடவி விட் டாள். சுட்ட இடம் குறிப்புச் சொல்லியிருக்க வேண்டும், அவர் உடம்பை அப்படியும் இப்படியும் அசைத்துக் கொண் டார். ஆற்ருமையில் நெடுமூச்சு விளைந்தது. அரும்பாடு பட்டு விழிகளை அசைக்க முயன்ருர் அவர். அரைப்பார்வை நிலை தான்; அதுவும் சிறுபொழுதுதான். மூடிய நயன வட்டங் களில் கண்ணிர் வளைந்தது. அவளுக்கு நெஞ்சு ஏறி இறங்கியது. மார்பில் படர்ந் திருந்த எலும்பு வரிசையில் ஓர் அழுத்தம் தெரிந்தது. குனிந்தவண்ணம், வலது கை துனிவிரலை வைத்துத் தடவி ள்ை. மின்னலுனர்வொன்று தேகமெங்கணும் ஊடுருவியது. மயிர்க் கூச்சம் கிளர்ந்தது. தெய்வமே என்று மெய்மறந்த நினைவில் டேசிய அவள், அந்த அரும்ைப் பொருளை எடுத்துக் கண்களிடைப் பதித்தாள். கொட்டு மேளம் முழங்க, தன் கழுத்தில் மங்கள நாண் ஏறிய அந்தப் பொற்புடைத் தவநாளை அவள் எங்ங்ணம் மறப்பாள்? - - . சுவர்க்கடிகாரம் இருமுறை ஓசை பரப்பிற்று. அகிலாண்டம் எழுந்து, அவுன்ஸ் கிளாசை எடுத்துக் கழுவினுள். மருந்துக் கலவயை அளவு பார்த்து ஊற்றி எடுத்துச் சென்று, கணவரின் உதடுகளே நீக்கி ஊற்றினுள். செம்பாதி உள்ளுக்குள் சென்றது. வழிந்ததைத் தன்னுடைய பட்டுச் சேலைத் தலைப்பால் துடைத்தாள். திருநீறு மடலினின் தைப் பக்தி கனிந்த பக்குவத்தோடு தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். அச்சம் கடந்த ஆறுதல் பூத்தது. х அவள் கைளே உதறி நெட்டி முறித்தாள். தூக்கம் நேத் திரங்களில் ஊஞ்சலாடியது. அதைக் கருதாதவள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/4&oldid=476414" இலிருந்து மீள்விக்கப்பட்டது