27
காட்சிப் படலம்
பற்றலர்தாம் தன்னெதிரில் பணிந்து நிற்பின்
பகைவிடுத்து நகைத்துரிமை பூணல் வீரம்
உற்றவர்தம் கடனாகும்; அதனால் வேழன்
உளங்கனிந்த வயத்தரசன் வேண்டுகோளால்
செற்றமது தவிர்ந்தவனாய் மூரல் பூத்துச்
செழுமனையில் விருந்தயர இசைவு தந்தான்;
கொற்றவன்றன் உள்ளமெலாம் மகிழ்வு பொங்கக்
கோவிலுக்கவ் வேலானை அழைத்துச் சென்றான். 33
பாரகத்தை நடுங்குறுத்தும் மடங்கல் போன்றான்
பகரரிய பெருவீரன் வருகை கேட்ட
ஊரகத்து மாந்தரெலாம் குழுமி யாண்டும்
உவகையொடு வாழ்த்தொலிகள் எழுப்பி நின்றார்;
தாரடுத்த மார்பகத்தான் களிற்றின் மேலான்
தலைநிமிர்ந்த தோற்றத்தான் வலமாச் சுற்றிக்
காரடுத்த தலைவாயி லுட்பு குந்தான்;
கண்விழித்துக் கண்டவர்கள் வியந்து நின்றார்.34
பற்றலர்- பகைவர், மூரல்பூத்து - புன்னகைசெய்து,
குழுமி - கூடி, தார் - மாலை, கார்- மேகம்.