வீரகாவியம்
28
வயத்தரசன் தருவிருந்தில்
மாவேழன் மகிழ்ந்திருந்தான்
வருகைதரும் வீரனுக்குப் பெருவி ருந்து
வைத்திருந்தான் வயவேந்தன், கற்றோர் மற்றோர்
பெருமைமிகு படைத்தலைவர் வணிக மாந்தர்
பெருஞ்செல்வர் இவரனையார் குழுமி வந்தார்;
பருவஎழில் நன்மாதர் நடனங் கண்டும்
பருகுவன உயரியன அருந்தி நின்றும்
இரவதனிற் பெரும்பொழுது களிப்பில் மூழ்கி
இன்பமெனும் கடற்பரப்பில் அவன்தி ளைத்தான்.35
உள்ளிருக்கும் குருதிஎலாம் சொட்டச் சொட்ட
உடலங்கள் கூத்தாடும் போரே கண்டோன்
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் மாத ரார்தம்
களிநடனங் கண்டிருந்தான்; கைகள் கொட்டி
நள்ளிரவுப் பொழுதுவரை மகிழ்ந்தி ருந்தான்;
நயந்துரைகள் பலபேசி அவன்பால் நட்புக்
கொள்ளலுக்கு வந்தவரை அன்பால் நோக்கிக்
கொலைவேலான் உரையாடித் துயிலச் சென்றான்.36
குருதி - இரத்தம் கள் - தேன்