இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் முடியரசன் அவர்களால் எழுதப்பட்ட இவ் வீரகாவியம், வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதாகும். இந்நூல் வீரச்சுவை ததும்பும் 476 எண்சீர் விருந்தங்களால் யாக்கப்பட்டுள்ளது.
தமிழன்னைக்குத் தனித்தனிப் பாமலர் தூவி வழிபடுவதோடன்றிக் காப்பிய மாலைகளையும் சூட்டிக் களித்துவரும் இவர், இம்மனங்கமழ் மாலையையும் தொடுத்துத் தந்துள்ளார்.
சொல்லழகும் நடையழகும் மிளிர்ந்து, உவமைப்பொலிவும் உள்ளுறைச் செறிவும் பயின்று, கருத்தாழமும் கவிதை நயமும் மிடைந்து, அழகோவியமாக வெளிவருகிறது இக் காவியம்.
காப்பியம் அளித்த கவிஞர்க்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் உங்கட்கும் நன்றி கூறிப் பெருமகிழ்வுடன் இந்நூலை வெளியிடுகிறோம். வணக்கம்.
புதுக்கோட்டை அக்டோபர், 1970 |
பு. அ. சுப்பிரமணியன் பதிப்பக உரிமையாளர். |