திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
"==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை==
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை==

=பரிமேலழகர் உரை=

;அதிகார முன்னுரை: அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், '''அடக்கமுடைமை'''யின் பின் வைக்கப்பட்டது.

==திருக்குறள் 131 (ஒழுக்கம்)==

;ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
;முயிரினு மோம்பப் படும்

::ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
::உயிரினும் ஓம்பப் படும் (01)

;பரிமேலழகர் உரை(இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;
:ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.


==திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)==

;பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
;தேரினு மஃதே துணை

::பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
::தேரினும் அஃதே துணை

;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;

23:56, 15 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை

பரிமேலழகர் உரை

அதிகார முன்னுரை
அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 131 (ஒழுக்கம்)

ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் (01)
பரிமேலழகர் உரை(இதன்பொருள்)
ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.


திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)

பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை
பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;