பக்கம்:Mixture.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பிரம்மாண்ட டப்புவின் உலகப் பிரயாணங்கள் யாக என் கூடாரத்தைச் சுற்றிலும் பொழிந்தேன் விாைவினில், இதற்குள்ளாக நான்கு புறமும் வந்து கொண்டிருந்தசிங்கக் கூட் டங்கள் அருகில் நெருங்கி விட்டன ; உடனே நான் கூடாரத்தின் நடுவில் கின்று கொண்டேன்; நான்கு பக்கங்களிலும் சிங்கக் கூட்டங் கள் நெருங்கி நெருங்கி வர ஆரம்பித்தன. நான் கவனித்துக் கொண்டே யிருந்தேன் ; அந்தச் சிங்கக் கூட்டங்கள் துப்பாக்கி மருந்து பட்டையாக வைக்கப்பட்டிருக்த இடத்திற்கு வந்ததும் என் கைத்துப்பாக்கியினுல் அந்த மருந்தை நோக்கிச் சுட்டேன். அம்மருந்து உடனே பத்திக் கொண்டு வெடித்தது! அதன் பக்கத் திலிருந்த சிங்கங்களெல்லாம் மருந்து வெடியினுல் கொல்லப்பட்டு ஆகாய்த்தில் ஆகாசபாணம் போல் போய், பிறகு ஒவ்வொன்ருய்க் ேேழவிழுந்து மடிந்தன; ஏறக்குறைய ஒரு ஐந்து நிமிஷம் சிங்கமழை பெய்ததென்றே சொல்ல வேண்டும். மடிந்த எல்லா சிங்கங்களும் ேேழ விழுந்த பிறகு, அத்தனே சிங்கங்களையும் நான் எப்படிக் கொண்டு போய் அரசருக்குக் காண்பிப்பது அதற்காக அவை களின் வால்களேமாத்திரம் அறுத்துக் கட்டிக் கொண்டு அம்மூட் டையை அரசருக்குக் கொண்டு போய்க் காண்பித்தேன். அவர் முதலில் மிகவும் ஆச்சரியப்பட்டு, பிறகு மிகவும் சந்தோஷப் ப்ட்டவராய், ஒருவாலுக்கு ஐந்து டொன் விகிதம் எனக்குப் பரிச வளித்தார். அது ஒரு பெரிய குவியலாச்சுது. அத்தனே பொன்னேயும் எப்படி பாதுகாப்பதென்று கவலைப் பட்டவனுய், தினம் இரவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு போய், அத்தேசத்தில் ஸ்பிங்ஸ் (Sphinx) atsiraalih சிங்கத்தின் பெரிய சிலையின் கீழ் புதைத்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு யாருக்காவது அப்பொன் வேண் டியதாயிருந்தால் அந்த ஸ்பிங்ஸ் சிலையின் கீழ் அறுபது அடி தோண்டிப் பார்ப்பீர்களாயின் உங்களுக்குக் கிடைக்கும். அந்த சிங்கங்களின் வால்கள் என்னவாயின்வா ? அவைகளை யெல்லாம் நானிருந்த விட்டின்மேல்மாடி அறையொன்றில் வைத்துப் பூட்டி யிருக்தேன். நான் தினம் தோறும் மேற்சொன்னபடி அரசர் எனக்குக்கொடுத்த பொன்னே ஒளித்து வைப்பதில் வேலையாயிருந்த பொழுது, அம்மேல் மாடியில் இருந்த எலிகள் அந்த வால்களை யெல்லாம் தின்றுவிட்டன. நான் நம்முடைய தேசத்திற்குத் திரு ம்பிவரும்பொழுது அந்த வால்களை எல்லாம் கொண்டுவரலாமென்று அந்த அறைய்ைத் திறந்து பார்த்தால், ஒரு வால் தவிர மற்றெல்லா விால்களையும் எலிகள் தின்றுவிட்டதைக் கண்டேன். மிகுந்திருந்த ஒருவாலைமாத்திரம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். அதை ய்ாாாவது பார்க்க வேண்டு மென்றிருந்தால் என்னுடைய திருஆர் பங்களாவுக்கு நான் எப்பொழுதாவது போகும்போது, என்னுடன் வந்தால், அங்கே ஒரு (அறையில் அதையும் எலி சாப்பிட்டு விடாதபடி! அதைத் தொங்க விட்டிருக்கிறதைக் காண்பிக்கிற்ேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/39&oldid=727332" இலிருந்து மீள்விக்கப்பட்டது