பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174


பெண் : பனியிருக்கும்! குளிரெடுக்கும்!
பால் நிலவின் நிழலிருக்கும் இரவினிலே!
ஆண் : இதழ் வெளுக்கும்! விழி சிவக்கும்!
இருவரது முகம் வியர்க்கும் உறவினிலே!
பெண் : மனதினிலே ஆசைக் கனல் எரியும்!
மலரணையில் கருங்குழலும் விரியும்!
ஆண் : இனிய காதல் தேன் மழையைச் சொரியும்!
இரண்டு நெஞ்சும் இணைந்து இன்பப்போர் புரியும்!
பெண் : கைகலந்து மெய்யணைந்து
கட்டித் தழுவிக் கொஞ்சும்!
ஆண் : கட்டில் மெள்ள மெள்ள வென்று
காதில் சொல்லிக் கெஞ்சும்!
பெண் : இருவர் என்னும் இடமும் அங்கே மறையும்!
ஆண் : ஒருவர் என்னும் நிழல் படத்தை வரையும்!
பெண் : இரவு செல்லும்!
ஆண் : பகல் நெருங்கும்!