இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
209
- (பல்லவி)
- எல்லாம் திரை மறைவே--உலகில்
- எல்லாம் திரை மறைவே
- கல்வி இருந்தென்ன கற்பனை இருந்தென்ன
- கண்டு ரசிக்க கண்களில்லாதவர்க்கு
- (எல்லாம்)
- கற்றுக் கொடுக்காத கவி வாணரின் புலமை
- கஞ்சத் தனமுடையோன் காக்கும் பணப் பெருமை
- கவைக்குதவாப்படிப்பு உணர்ச்சியில்லா நடிப்பு
- கதிரவன் ஜோதி முன்னே குடத்தில் இட்ட விளக்கு
- (எல்லாம்)
- ஆடம்பரம் இல்லா அறிவாளி நாவன்மை
- அவனியை உருவாக்கும் தொழிலாளி கைவன்மை
- நாடிக்கடல் கலந்த நதிநீரின் நல்ல தன்மை
- நன்றியில்லா தவர்க்கு செய்த செய்த நன்மை
- (எல்லாம்)
பிறந்த நாள்-1982
- இசை: K. V. மகாதேவன்