பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217


விந்தையிலும் பெரிய விந்தையடி!-இது
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
(விந்தை)


செந்தமிழ்ப் பண்பாட்டின் சிகரத்திலே
சிறப்புடன் வாழும் இந்தக் குடும்ப நிலை!
(விந்தை)


பந்தபாசம் என்றால் படியென்ன விலையென்று
தந்தையைப் பிள்ளை கேட்கும் காலமன்றோ!-இதில்
அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டுவிழா
கொண்டாடும் குடும்பம் இதைப்போல உண்டோ?
(விந்தை)


வந்தமருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய்க் கொண்ட உலகினிலே
மலர்ந்த முகங்காட்டி மருமகளைப் போற்றி
மகளென்று பிறர் எண்ணும் வகையினிலே
பாராட்டி சீராட்டிப் பழகிடும் மாமியும்
பேறுகள் பதினாறும் பெற்ற இந்தக் குடும்பம்!
(விந்தை)
படிக்காத மேதை -1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. லீலா



மருத-13