இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
217
- விந்தையிலும் பெரிய விந்தையடி!-இது
- சிந்திக்க முடியாத எங்குமே காணாத
- (விந்தை)
- செந்தமிழ்ப் பண்பாட்டின் சிகரத்திலே
- சிறப்புடன் வாழும் இந்தக் குடும்ப நிலை!
- (விந்தை)
- பந்தபாசம் என்றால் படியென்ன விலையென்று
- தந்தையைப் பிள்ளை கேட்கும் காலமன்றோ!-இதில்
- அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டுவிழா
- கொண்டாடும் குடும்பம் இதைப்போல உண்டோ?
- (விந்தை)
- வந்தமருமகளை நிந்தனை செய்வதையே
- வாடிக்கையாய்க் கொண்ட உலகினிலே
- மலர்ந்த முகங்காட்டி மருமகளைப் போற்றி
- மகளென்று பிறர் எண்ணும் வகையினிலே
- பாராட்டி சீராட்டிப் பழகிடும் மாமியும்
- பேறுகள் பதினாறும் பெற்ற இந்தக் குடும்பம்!
- (விந்தை)
படிக்காத மேதை -1960
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: P. லீலா
மருத-13