இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
241
- (தொகையறா)
- பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து
- மாடிமனை நிலபுலன்கள் வாங்கி வைத்து
- வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமோ?
- மாறாத மன நிறைவு தந்திடுமோ?
- (பாட்டு)
- இருப்பவர்கள் அனுபவிக்க
- இருக்குது பல இன்பமே!-பணம்
- இருப்பவர்கள் அனுபவிக்க
- இருக்குது பல இன்பமே!
- இதையுணர்ந்து அதை அறிந்து
- சுகிக்க வேணும் என்றுமே!
- (இருப்பவர்கள்)
- (தொகையறா) .
- தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!
- ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!
- (பாட்டு)
- காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே
- வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே
- வண்டாக ஆடிப்பாடி உலகிலே
- (இருப்பவர்கள்)