பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241


(தொகையறா)
பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து
மாடிமனை நிலபுலன்கள் வாங்கி வைத்து
வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமோ?
மாறாத மன நிறைவு தந்திடுமோ?
(பாட்டு)
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே!-பணம்
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே!
இதையுணர்ந்து அதை அறிந்து
சுகிக்க வேணும் என்றுமே!
(இருப்பவர்கள்)
(தொகையறா) .
தேவைக்கு மேல் பொருளைச் சேர்த்து வைத்துக் காப்பவரே!
ஆவிபோனபின் அதனால் என்ன பலன் சொல்வீரே!
(பாட்டு)
காலனும் வரும் முன்னே கண்ணிரண்டும் மூடுமுன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி வான வில்லாய் மறையு முன்னே
வண்டாக ஆடிப்பாடி உலகிலே
(இருப்பவர்கள்)