இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
240
- ஆருக்குந் தெரியாமல் பஞ்சமா பாதகம்
- அஞ்சாமல் தினம் செய்து
- ஊருக்கு நீதியை உபதேசம் செய்யும் -
- உலுத்தப் பயலும் ஒரு சாமி!
- ஆருக்கும் குடியல்லோம் அஞ்சோம் நமனை என்று
- ஆர்ப்பாட்டம் செய்து
- நேருக்குநேர் வெறும் நிழலைக் கண்டு நடுங்கும்
- நீசப் பயலும் ஒரு சாமி!
- கஞ்சாக் குடிப்பவனும் சாமி!-கடவுளைக்
- கண்டதாய்க் கதைப்பவனும் சாமி!
- காமியெல்லாங் கூட இங்கே சாமி!-பணம்சேர்க்கக்
- கயிறு திரிப்பவனும் சாமி!
- எத்தனெல்லாம் சித்தன்!
- ஏமாறுபவன் பக்தன்!
- ரோஹியெல்லாம் யோகி!
- பைராகி பெரும் தியாகி!
ராஜராஜன்-1957
- இசை : K. V. மகாதேவன் -
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்