பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


தொகையறா

கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே-சூரியன்
கிளம்பி விட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெலாம் செழிக்கவே!

பாட்டு

பொழைக்கும் வழியைப் பாரு!
ஒழைச்சாதான் சோறு!
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு!
எடுத்துத் திரியாதே! காசு பணம் சேரு!
ஓ ... ஓ ... ஓ

போடு சீரங்கி கரணம்போடு சீரங்கி-ஹை
ஆடுகின்ற அழகிபோல ஆடுசீரங்கி!...
புருஷனிடம் புதுப்பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி
பொறுத் திடாத மாமிரெண்டு பூசை கொடுப்பதெப்படி?
காட்டு சீரங்கி-செய்து காட்டு சீரங்கி!
ஓ ... ஓ ... ஓ

தொகையறா

ஏ....கண்ஜாடை காட்டும் கைகார ராஜா!
முன்னே வந்து நல்லாபாரு முள்ளில்லா ரோஜா!



மருத-2