பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79



ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா!
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

ஆண் : காவியமா?
நெஞ்சின் ஓவியமா?
அதன் ஜீவிதமா?
தெய்வீகக் காதல் சின்னமா?

பெண் : மொகலாய சாம்ராஜ்ய தீபமே! சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே!

ஆண் : மும்தாஜே முத்தே என் பேகமே! பேசும்
முழுமதியே என் இதயகீதமே!

பெண் : என்றும் இன்பமே! பொங்கும் வண்ணமே!
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே!

ஆண் : அன்பின் அமுதமே! அழகின் சிகரமே!
ஆசை வடிவமே! அழகின் அதிசயமே! (காவியமா)