பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



பெண் : உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!

ஆண் : அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே!

பெண் : உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே!

ஆண் : இதயம் அந்த மலைக்கு ஏது?
அன்பைக் காட்டவே!

பெண் : தெளிந்த நீரைப் போன்ற தூய
காதல் கொண்டோம் நாம்!

ஆண் : களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்!

பெண் : குதர்க்கம் பேசி என்னை மயக்க
எங்கு கற்றீரோ?

ஆண் : உனது கடைக்கண் பார்வை காட்டும்
பாடம் தன்னிலே?

இருவரும் : உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில்
ஊர்ந்து செல்லுவோம்!

மந்திரி குமாரி-1950

இசை G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி