பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற நெறி 247


என்றும், இங்ஙனமே, தலைவனால் பின் வதுவை செய்யப்பெற்ற மனைவியர்க்கும் பரத்தையர்க்கும் இப்புலவி முதலாயின உண்டென்றும் கொள்ளுதல் வேண்டும். இவை நிகழுங்கால் நேரும் கூற்றுகளின் விகற்பங்களையெல்லாம் ஈண்டு உரைக்கின் அவை மிகவும் விரியும். அவற்றைத் தலைவன் தலைவி முதலியோரின் கூற்றுகளை உணர்த்துப் நூற்பாக்களாலும், பண்டை அகப்பொருள் இலக்கியங்களாலும், பிற்காலத்தெழுந்த கோவை முதலிய நூல்களாலும் தெரிந்து கொள்ளலாம்.