பக்கம்:அகமும் புறமும்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன் • 339

விடத்து அறம் மாறிவிடுமாகலானும் இவை இரண்டையும் உடன்சேர்த்துக் கூறுகிறார். அரசியல் நுணுக்கத்தையும் மனத்தத்துவத்தையும் நன்குணர்ந்த கவிஞர்.

பழந்தமிழ் அமைச்சர்

மூன்றாவது அடி நன்கு ஆய்தற்குரியது. ‘பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த’ என்ற அடியில் கவிஞர் தம் வன்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார். மனிதன் பல்வேறு வகையில் உயரக்கூடும். உயரவேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பெற்றும் பலவகை செயல்களைச் செய்பவர் உண்டு. இவர்கள் செயல் செய்வதன் நோக்கம் உயர வேண்டுமென்பதே. அச்செயல்களின் பயனாகத் தாம் உயர்வதை மட்டும் கவனிப்பாரே தவிர, அச்செயலால் பிறருக்கு நன்மையா தீமையா என்பது பற்றி இவர்கள் கவல்வதில்லை. பழியுடைய செயலைச் செய்தால்தான் உயரமுடியுமென்றும் அஞ்சாமற் செய்வர். அரசனுக்கு விருப்பம் என்பதற்காகத் தீயனவற்றைப் புரிந்து அவனுடைய மதிப்பில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர் எத்துணைப் பேர்! மதுரைக் காஞ்சி கண்ட மாண்புடை அமைச்சர் இவ்வினத்தைச் சேர்ந்தவரல்லர்; உயரவேண்டும் என்ற குறிக்கோளுடைய வரேயாவர். ஆனால், பழியிலிருந்து நீங்கின உயர்ச்சியையே விரும்புகிறார்களாம் இவர்கள். ‘ஒரீஇ’ என்று அளபெடுத்த மையின் ‘நீக்கி’ என்ற பொருளைப் பெறவைக்கிறார் ஆசிரியர். ‘நான் என் போக்கில் செயல் செய்தேன். பழி வந்தால் யான் என்ன செய்ய முடியும்?’ எனப் பேசுபவர் உண்டு. அவ்வினத்திலுஞ் சேராமல் இவர்கள் கவனத்துடன் பழியை விலக்குகிறார்களாம். எளிதாக உயர்ந்துவிட வேண்டும் என்று கருதாமல் பழியை நீக்கின செயல்கள் புரிந்தே உயரவேண்டும் என்றமையின், உயருவதைவிடப்